Wednesday 4 July 2012

எதிர்கால கார்கள்! (future cars)


எதிர்கால கார்கள்!

எதிர்காலத்துக்கு நாம் என்ன விட்டுச்செல்லப்போகிறோம் என்று கவலையாக உள்ளது. சாதாரண குடிதண்ணீருக்கு சிரமப்படும் உலகில் தனி நீச்ச்ல் குளம் வைத்திருப்போர் வரை நாம் பார்க்கிறோம்.
எதிர்காலக்கார்கள் சுற்றுப்புறச்சூழல், எரிபொருள் சிக்கனம்,மாற்று எரிபொருள், ஒட்டுவதற்கு எளிமை ஆகியவற்றில் சிறந்ததாக இருக்க வேண்டும். அப்படி சில கார்களைப் பார்ப்போம்!!
1. Ying Hui Choo's Peugeot Blade,Peugeot ன் இந்தக்கார்
பின்புறமுள்ள காற்றாலையிலிருந்து சக்தியை மின் கலன்களுக்கு அளிக்கிறது.
2.Oskar Johansen's Peugeot 888 நடுவில் மடிந்து கொள்ளும். அதனால் நிறுத்தி வைக்க எளியது. மேலும் நாலாபுறமும் நன்றாக பார்க்கலாம். ஓட்டுவதற்கு எளியது.


3.Emre Yazici's lightweight 'EGO’ இரண்டு சக்கரங்களில் ஓடுவது. யாசி என்ற துருக்கியர் வடிவமைத்துள்ளார். இது மின்சக்தியால் ஓடும் ஒரு நபர் செல்லும் வாகனம். நிற்கும் இடத்திலேயே 180 கோணம் திரும்பும். நிறுத்திவைக்க மூன்றில் ஒரு பங்கு இடம் போதும்.
4.Tolga Metin என்ற அமெரிக்கர் வடிவமைத்த Peugeot Magnet என்ற இந்தக்கார் காந்த சக்தியால் ஓடக்கூடியது. ஏற்கெனவே காந்தப்புலத்தில் ஓடும் ஜப்பானின் அதிவேக தொடர்வண்டிகளின் பாணியில் இது அமைக்கப்பட்டுள்ளதாம்.
5.Woo-Ram Lee ,electric MoVille
இதுவும் ஒருவர் அமர்ந்து செல்லும் கார்தான். மூன்று மின்காந்த சக்கர உருளைகளால் ஓடும். இடத்தை அடைக்காமல் நிறுத்தலாம்.
6.Ke Guo என்ற சீனர் வடிவமைத்த கார். ஃபார்முலா 1 கார்கள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பார்த்து ஒட்டுவதுபோல் கண்ணாடிகள் இதிலுள்ளன.
7.Michael Witus Schierup என்ற டென்மார்க் வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்டது. இதன் நீளத்தை மூன்று விதமாக குறைத்து கூட்டி அமைக்கலாம்!!! நெடுஞ்சாலையில் 16’5” அடி நீளமும்,நகர்புறத்தில் ஓட்டும்போது 12” நீளமும், வீட்டில் நிறுத்தும்போது இன்னும் நீளம் குறைவாகவும் மாற்றிக்கொள்ளலாம்!!
8. அர்ஜெண்டினாவச்சேர்ந்த Esteban Peisci வடிவமைத்த காரைப்பாருங்கள். இதில் சக்கரங்களுக்கு பதில் உருளைகள் மூன்று உள்ளன.எல்லாத்தையும் பார்த்துவிட்டீர்கள். உங்களுக்குப் பிடித்ததை சொல்லுங்க........... கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.

வாழைப்பழம் நம்மை வாழவைக்கும் ஞானப்பழம்


வாழைப்பழம் நம்மை வாழவைக்கும் ஞானப்பழம்


வாழைப்பழம் எளிமையான விலை குறைவான ஊட்டச்சத்து மிக்க உணவாகும்.
இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும்
தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது.
டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது.
டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன்
குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன்
காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து
சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பூவன் பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு
இந்த பழம் மிகவும் நல்லது. பேயன் பழம் குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள்
தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும். மலைவாழை சோகையை நீக்கும்.
எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை. ரஸ்தாலி இதில்
மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன்
காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.
காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன்,
ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர
அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை
ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.